Monday, May 14, 2007

சுய விளம்பரம்

என்னை பற்றி : பெயர் : விஜயபாபு பூபதி.
வயது : 27.
ஊர்: அசகளத்தூர்.
தொழில்: கணிப்பொறி வல்லுனர்.

எனக்கு நீண்ட நாட்களாக எழுத வேண்டும் என்பது அவா. உனக்கு என்னடா அதற்க்கு தகுதி என்று நீங்கள் கேட்பது எனக்கும் கேட்கிறது. எல்லாம் 7 வயதில் இருந்து மாலைமதியும் , ராணிமுத்துவும் படிக்க ஆரம்பித்து , 9 வது வயதில் பாலகுமாரன் , ராஜேஷ்குமார் , பட்டுகோட்டை பிரபாகர் மற்றும் சுபாவும், பின்னர் ஜயகாந்தனையும், சுஜாதாவையும் தேடி தேடி படித்த அனுபவம் தான். இந்த அனுபவம் கை கொடுக்கும் என்கிற நம்பிக்கை தான் நான் எழுத தூண்டியது.

இவ்வளவு நாட்களாக, எழுதாமல் இருந்ததற்கு காரணம், என்ன எழுதவது என்று தெரியாதது தான். கடந்த இரு வருடங்களாக, ஒரு நாளைக்கு குறைந்தது 5 மணி நேரம்(வேலையே இது தான்), வலையில் எழுதுபவர்களின் எழுத்தை படிக்கும் போதெல்லாம், நாமும் ஏன் எழுத கூடாது என்ற எண்ணம் தோன்றி மறையும். இரண்டு வருடம் துபையிலும், இரண்டு வருடம் ஆப்கானிலும் ஜல்லி அடித்து இருந்தாலும், "இந்த தமிழன், இந்தி பேச மாட்டான்" என்று சொல்லி வந்த நாம், ஏன் எழுத கூடாது? என்று என் மனதை தேத்தி கொண்டு , எழுதுகிறேன். ஒன்று மட்டும் என்னால் நிச்சயமாக சொல்ல முடியும். நான் கிறுக்க போவதில் ஒன்றும் உபயோகமாய் இல்லை என்றாலும் , கண்டிப்பாக எழுத்து பிழை இருக்காது (முயற்சி செய்வேன்).

தமிழில் எழுதவேண்டும் என்ற ஆசையினால் தொடங்கப்பட்ட பதிவே இது.

1 comment:

Unknown said...

yean ipdi nalla dhaan iruindheenga ....... yaaro seivana seinjutaanga

adhuku dhaan night timela thaniya pohadheenanu solradhu ippo paaruinga tamil mohini piduchuruchu ......

idha epdi pokuradhuuuuuuuuuuuuu

Kaalam dhaan badhil sollanum ..

vijayababu pathi padikura ellathukum idhu oru aarambam ....