அப்படி இப்படி என்று, கடைசியாக பதிவு ஆரம்பித்தாயிற்று. என்ன எழுதுவது என்று தான் தெரியவில்லை. தமிழ்மணம் வேறு, மூன்று பதிவுகளுக்கு பின் வருக என்று தலையில் கொட்டுகிறது. நானும் மொட்டு வலையை உத்து உத்து பார்த்தும் ஒன்னும் நடக்கவில்லை. பிறகு, வழக்கம் போல, நமக்கு கைவந்த கலையான வெட்டி ஒட்டுவதே செய்துவிடலாம் என்று முடிவு எடுத்தேன். ஆனாலும், இந்த வரலாற்று முக்கியத்துவம் (சரி, சரி,சும்மா தமாசு)வாய்ந்த பதிவு, வெறும் ஜல்லியாக இருந்தால் நன்றாக இருக்காது என்பதால் அண்ணாத்தே இளவஞ்சி அவர்களின் பதிவைப்பற்றி எழுதலாம்(வெட்டி ஒட்டலாம்) என்பதின் விளைவே இப்பதிவு.
இவர் எழுதும் அனைத்தும் பிடிக்கும் என்றாலும், மிகப்பிடித்தவைகளின் சுட்டியை கீழே கொடுத்துள்ளேன்.
எனக்கு பிடித்த பதிவுகள் :-
1. நல்லா ( நாலு நாலா) கெளப்புராய்ங்கடா பீதிய
இவருடைய பதிவை படிப்பதே ஒரு சுகானுபவம்.ஆனால், இவருடைய இந்த பதிவை படித்தால், உங்களின் மனம் நெகிழ போவது உறுதி. இவர் சொல்லும் பொருளை நம் கண் முன்னே கொண்டுவந்து விடும், இயல்பான எழுத்துக்கு சொந்தகாரர்.
இவருடைய "தவிர்த்திருக்கக் கூடிய நான்கு செயல்கள்" படிக்கும் போது, அவர்கள் நடந்து வந்தது, கிராமத்து பெண்ணின் கையறுநிலை பார்வை, கம்பத்தில் சாய்ந்தபடி இவர் நிற்பது, நம் கண் முன்னே தோன்றும்.
விகடமாக ஆரம்பித்து, மனதை நெகிழ வைக்கும் நிகழ்வுகளை சொல்வது இவரது எழுத்து நடை.
2. மாப்பூ...! வச்சிட்டான்யா ஆப்பு...!!
3. விட்டில் பூச்சிகள்
4. எமிலி என்றொரு தோழி
5. ஒரு உதவின்னு கேட்டு வந்துட்டா..
6. சில பட்டாம்பூச்சிகளின் பருவகாலங்கள்
7. அப்பாவின் சட்டை
8. ஜிம்மியும் சில நிகழ்வுகளும்
9. கல்யாணம் தான் கட்டி கிட்டு...
தமிழ் வலையுலகில் ஒரு பய புள்ள விடாம படிச்சது, இத்தொடராகத்தான் இருக்கும்.
10. காலச்சுழிப்பில் தொலைந்தவைகள்
தமிழ்மண,தேன்கூடு மக்களே, இதோ உங்கள் விஜயபாபுவும் , தமிழ்மணத்திற்கும், தேன்கூட்டிற்க்குள்ளும் வந்து விட்டதை அறிக.
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
விஜயபாபு பூபதியண்ணே!
என்ன வெளையாட்டிது?! :)
சுட்டிகளுக்கும் பதிவுக்கும் நன்றி!
இளவஞ்சி அவர்களே, வருகைக்கு நன்றி.
Post a Comment